TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டம், தேர்வு முறை!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டம், தேர்வு முறை!
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - பாடத்திட்டம், தேர்வு முறை!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டம், தேர்வு முறை!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் தற்போது குரூப் 2,2ஏ தேர்வு வருகிற மே மாதம் 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தற்போது இதில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் இதில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு தொடர்பான தகவல்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்

குரூப் 2 தேர்வு:

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டி தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற மே மாதம் 21ம் தேதி அன்று குரூப் 2,2ஏ தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வில் 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இத்தேர்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். அத்துடன் இத்தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது.முதல்நிலைத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

விஜய் டிவியில் இருந்து விலகிய மாகாபா ஆனந்த் – சூப்பர் சிங்கரில் இனி ப்ரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

இதில் முதல் பிரிவில் தமிழ் அல்லது ஆங்கில மொழிப்பாடத்தில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படுகிறது. இரண்டாம் பிரிவில் பொது அறிவு பகுதியில் பட்டப்படிப்புத் தரத்தில் 75 வினாக்களும் கணிதப்பகுதியில் பத்தாம் வகுப்புத் தரத்தில் 25 வினாக்களும் கேட்கப்படுகிறது. இத்தேர்வில் ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 வீதம் 200 வினாக்களுக்கு மொத்தமாக 300 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இத்தேர்வில் குறைந்தபட்சமாக 90 மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். இதையடுத்து முதன்மைத் தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படுகிறது.

இதில் முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் தான் அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும். இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதன் இரண்டாம் தாளில் பொது அறிவு பகுதியிலிருந்து விரிவான விடையளிக்கும் வகையில் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் இத்தேர்வுக்கு கடந்த மாதம் 23 தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் தேர்வர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!