விஜய் டிவியில் இருந்து விலகிய மாகாபா ஆனந்த் – சூப்பர் சிங்கரில் இனி ப்ரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் இருந்து மா.கா.பா விலகியுள்ளார். இவருக்கு பதிலாக பிரியங்கா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாகாபா ஆனந்த்:
விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்களின் மனதில் பதிந்தவர் தான் மா.கா.பா ஆனந்த். இவர் ஆரம்ப காலத்தில் கோவை சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதற்கு பிறகு ரேடியோ மிர்சி பண்பலையில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் பின்பு நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் நடித்தார். இதுவே மாகாபா ஆனந்த்திற்கு முதல் திரைப்படமாகும்.
முடிவுக்கு வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் – தனம் சுஜிதா வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
இந்த திரைப்படங்களை தொடர்ந்து நவரச திலகம், கடலை, அட்டி, மீசைய முருக்கு, பஞ்சுமிட்டாய், மாணிக், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் முதலான திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இந்த திரைப்படங்கள் எதுவும் மா.கா.பா ஆனந்திற்கு மிக பெரிய ரீச்சை கொடுக்கவில்லை. தொகுப்பாளாராக மட்டுமே மக்களின் மனதில் நின்று கொண்டிருக்கிறார். தற்போது கூட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவரது காமெடியான பேச்சுக்கே பலரும் அந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். தற்போது திடீரேன மா.கா.பா ஆனந்த் இந்த நிகழ்ச்சிகளில் இருந்து விலகிக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக பிரியங்கா சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. மா.கா.பா ஆனந்த் எதற்காக இந்த நிகழ்ச்சிகளில் இருந்து விலகினார் என்பதர்கான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மா.கா.பா அவரது குடும்பத்துடன் தாய்லாந்து செல்ல இருப்பதால் தற்காலிகமாக மட்டுமே இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்.