அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு – இதனை கட்டாயம் செய்யுங்கள்!! அதிரடி உத்தரவு!

0
அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு - இதனை கட்டாயம் செய்யுங்கள்!! அதிரடி உத்தரவு!
அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு - இதனை கட்டாயம் செய்யுங்கள்!! அதிரடி உத்தரவு!
அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு – இதனை கட்டாயம் செய்யுங்கள்!! அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகளை அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

ரேஷன் கடை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது ரேஷன் கடைகள் பள்ளமான பகுதிகளில் இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி அங்கு சேமித்து வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் சேதமடைகிறது.

இது தொடர்பாக சில அறிவுரைகளை அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் நியாய விலைக் கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான பகுதிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் அனைத்து கடைகளிலும் மெழுகுவர்த்தி, அரிசி, மண்ணெண்ணெய், அவசரகால விளக்கு உப்பு, மற்றும் தீப்பெட்டிகள் உள்ளிட்டவற்றை தேவையான அளவு வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரி ஊதியம் – நீதிமன்றம் உத்தரவு!

Exams Daily Mobile App Download

கடந்த வருடம் மழையால் பாதிக்கப்பட்ட நியாயவிலைக்கடைகளில் இந்தாண்டு அவ்வாறு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மழையின் காரணமாக நியாயவிலை கடைகளின் சுவர் அல்லது மேற்கூரை சேதமடைந்தால் உடனடியாக மற்றொரு இடத்தில் கடைகளை அமைத்திட வேண்டும். மேலும் மழைக்காலங்களில் நியாயவிலை கடைகள் செயல்படுகிறதா? என கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். இந்த கட்டுப்பாட்டு அறைக்கான தொலைபேசி எண்ணை பொதுமக்களுக்கு தெரியும் விதமாக அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!