1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூலை 9 வரை பள்ளி விடுமுறை!
கர்நாடகா மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக குறிப்பிட்ட சில தாலுகாவை சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூலை 6) முதல் 9ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை
கர்நாடகாவில் பருவமழை துவங்கி வெளுத்து வாங்கி வரும் நிலையில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு இன்று (ஜூலை 6) முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கர்நாடகா கடலோரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு தக்ஷின கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட அரசுகள் உத்தரவிட்டுள்ளன. அதன்படி பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பியு மற்றும் பட்டயக் கல்லூரிகள் அனைத்தும் நாளை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அருமையான பணி வாய்ப்பு – முழு விவரங்களுடன்!
இப்போது பள்ளிகளை மூடுவதற்காக வெளியிடப்பட்ட இந்த உத்தரவு முடிகெரே, கலசா, கொப்பா, சிருங்கேரி, கலசா, என்.ஆர்.புரா, சிக்கமகளூரு ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கனமழை காரணமாக முடிகெரே, கொப்பா, சிருங்கேரி, கலசா, என்.ஆர்.புரா மற்றும் சிக்கமகளூரு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 6 முதல் 9 வரை விடுமுறை அளிக்கப்படும் என சிக்கமகளூரு துணை ஆணையர் கே.என்.ரமேஷ் அறிவித்துள்ளார்.
இருப்பினும், சிக்கமகளூரு தாலுக்காவின் அம்பலே மற்றும் லக்யா ஹோப்ளிகளில் உள்ள பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது வெளிவந்துள்ள நிலவரப்படி, கர்நாடகாவின் இரண்டு கடலோர மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டு சில வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிகேயில் உள்ள உல்லால் மற்றும் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூர் மற்றும் மறவந்தே கடற்கரைகள் போன்ற பல பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.