சிலிண்டர் புக் செய்யும் வாடிக்கையாளர் கவனத்திற்கு – இதை மட்டும் பண்ணாதீங்க!
வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக் செய்யும் போது டெலிவரி செய்யும் ஏஜென்சிகளுக்கு எந்தவித தொகையையும் வழங்க கூடாது என பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிலிண்டர்:
இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் அதன் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓரளவுக்கு சிலிண்டரின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
Join Our WhatsApp Group” for Latest Updates
இதற்கிடையில் சிலிண்டரையே வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வரும் போது சிலிண்டரை டெலிவரி செய்யும் ஏஜென்சிக்கும் தனியாக பணம் கொடுக்க வேண்டியுள்ளதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டெலிவரி செய்யும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ரசீதில் உள்ளதை காட்டிலும் கூடுதலாக எந்தவித தொகையையும் வசூலிக்க கூடாது எனவும், பொதுமக்களும் டெலிவரி ஏஜென்சிகளுக்கு கூடுதல் கட்டணம் தரக்கூடாது எனவும் பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 216 நாட்கள் பள்ளிகள் இயங்கும் – பட்டியல் வெளியீடு!
அதாவது, பொதுமக்கள் சிலிண்டரை புக் செய்யும் போதே சிலிண்டரின் விலையுடன் டெலிவரிக்கும் சேர்த்து பணத்தை செலுத்துகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர்கள் ஏஜென்சிக்கே சென்று கேஸ் சிலிண்டரை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் டெலிவரி தொகை 29.26 ரூபாய் போக மீதமுள்ள தொகையை மட்டும் ஏஜென்சிக்கு அனுப்பினால் போதுமானது.