2023 நவம்பரில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இந்திய தேர்தல் ஆணையம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
நடப்பு ஆண்டு சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதாக முன்னதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை இந்திய தேர்தல் ஆணையர் இந்த மாநிலங்களுக்கான தேர்தல் நடக்கும் தேதிகள் குறித்த முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் நவம்பர் 23ஆம் தேதியும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் நவம்பர் 7 மற்றும் 17-ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ஆம் தேதி, மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ஆம் தேதி, தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
உரிமைத்தொகை தொடர்பாக வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் – முதல்வர் முக.ஸ்டாலின் அதிரடி!
தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அனைத்தும் டிசம்பர் 3ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளன. 5 மாநிலங்களிலும் 679 தொகுதிகளில் 1.77 லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மது, போதை பொருட்கள், இலவச பொருட்கள் மற்றும் கணக்கில் வராத பணம் ஆகியவற்றை எடுத்து செல்வது கண்காணிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.