உரிமைத்தொகை தொடர்பாக வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் – முதல்வர் முக.ஸ்டாலின் அதிரடி!
தமிழகத்தில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக வங்கிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முக்கிய அறிவுறுத்தல்:
தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத்திற்காக அயராது உழைக்கும் பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கவும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தவும் ரூபாய் 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி விதிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. இறுதியாக ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கடந்த மாதம் செலுத்தப்பட்டது. இனி மாதம் தோறும் 15ஆம் தேதிகளில் உரிமைத்தொகை வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான உரிமை தொகை அக்.15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக உள்ளதால் செப்டம்பர் 14ஆம் தேதி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
கடந்த மாதம் வங்கிகளில் பல்வேறு காரணங்களுக்காக மகளிர் உரிமைத்தொகை பிடித்தம் செய்யப்பட்டது. இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு தற்போது உரிமைத் தொகைகளை பிடித்தம் செய்யக்கூடாது என்று வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இனி இது போல் பிடித்தம் செய்யப்படும் வங்கிகளில் உள்ள கணக்குகள் வேறு வங்கிக்கு மாற்றபடும் என்றும், இது குறித்த புகார்களை 1100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் இந்த முறை மகளிர் உரிமைத் தொகையை வங்கிகளில் பிடித்தம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.