மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க ஏற்பாடு – அமைச்சர் விளக்கம்! தற்கொலை விவகார வழக்கு!
12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அந்த பள்ளியின் பொருட்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால், அந்த பள்ளி மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
தற்கொலை வழக்கு:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில் 5 நாட்களாக மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளி வளாகத்திற்குள் சென்று பள்ளி வாகனங்கள் அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இது மட்டுமல்லாமல் பள்ளியின் உடைமை பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தினர். இதனையடுத்து, போராட்டம் வன்மையாக வெடித்த காரணத்தினால் மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர், வேதியியல் ஆசிரியர், கணித ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 390க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மாணவியின் மரணம் குறித்த எந்த செய்தியையும் சமூக வலை பக்கங்களில் பகிர கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை கிடையாது? அரசு அதிரடி அறிவிப்பு!
இதனையடுத்து, சம்மந்தப்பட்ட பள்ளியின் பொருட்கள் அனைத்துமே சேதமடைந்துள்ளதால் பள்ளி மீண்டும் இயங்க 2 மாதங்கள் ஆகலாம். இதனால், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளிக்கு அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.