தமிழகத்தில் நாளை (ஜூலை 29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ் மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (29.07.2022) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மின்சாரத்துறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. தற்போது மின் வாரியத்தை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு இனி மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்யப்பட்டு வருகிறது. இதனை அறிந்து மின் பயனர்கள் மின் உதவியுடன் செய்யப்படும் வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர். மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்
அம்மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்திராநகர், ஆர்.எஸ்.மங்கலம், ஆவரேந்தல், பாரனூர், கலங்காபுளி, சித்தூர்வாடி, அழிந்திக்கோட்டை, அத்தானூர், உப்பூர், கடலூர், மோர்ப்பண்ணை, காவனூர், துத்தியேந்தல் ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.