தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்செய்தி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை:
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தியாவில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையின் நீண்ட கால சராசரி மழை அளவு 96 முதல் 104 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5 சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்தியாவில், மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கனமழையினால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது. அது மட்டுமல்லாமல் இடைவிடாத மழை காரணமாக ரயில், பேருந்துப் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக
கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 172 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சில ஆறுகளில் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது.
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை (ஜூலை 29) ஆன்லைன் மாதிரித்தேர்வு
இதே போல் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு காரணம் வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சியே என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவது மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்