தமிழகத்தில் நாளை (ஜூலை 19) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது என்று வடக்கன்குளம் காற்றாலை மின் பண்ணை உதவி செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் மின்சார துறை அதிக லாபம் ஈட்டும் துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் மின்சாரம் என்பது நம் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக உள்ளது. அதனால் அது மற்றத்துறைகளை காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தரமான மின் சேவையை வழங்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதை தவிர மின்சார வாரியம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதம் ஒரு முறை மின்தடை அறிவிக்கிறது. மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகளில் ஏற்படும் மின் இணைப்பு பிரச்சனைகள், மின் வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள், மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய பணிகளில் ஈடுபடும் மின் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்போ அல்லது உயிர் சேதமோ ஏற்படாத வகையில் மின்தடை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் தொற்று பரவலா? அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அருகே பெருங்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக 19ம் தேதி (நாளை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருங்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறப்படும் பகுதிகளான குமாரபுரம், புதியம்புத்தூர், மதகநேரி, மாற நாடார் குடியிருப்பு, செம்பிக்குளம், பிள்ளையார் குடியிருப்பு, யாக்கோபுரம், சவுந்தரலிங்கபுரம் ஆகிய பகுதிகளுக்கும், மேலும் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறப்படும் காற்றாலை பண்ணைகளுக்கும் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.