தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் தொற்று பரவலா? அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!
நாடு முழுவதும் பல மாநிலங்களில் குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குரங்கு அம்மை தொற்று:
ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய்த் தொற்று தற்போது அமெரிக்கா, ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கி இருக்கிறது. தற்போது சுமார் 50க்கு மேற்பட்ட நாடுகளில் இந்த நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனமும் இது குறித்து கூடுதல் அக்கறை எடுத்து வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி வளைகுடா நாட்டில் இருந்து கேரளா திரும்பிய 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கேரளா, ஆந்திராவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
PM KISAN திட்டத்தில் இணைவதற்கான எளிய வழிமுறைகள் – முழு விவரங்கள் இதோ!
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. மேலும், தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து பன்னாட்டு விமானங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். இதுவரை 63 வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.