தமிழகத்தில் நாளை (ஜூன் 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ராஜபாளையம் கோட்டத்திற்கு உட்பட்ட ரெட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி, முடங்கியார் உப மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (செவ்வாய்க்கிழமை) ஜூன் 21 ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் தடை செய்யப்பட்டு மின்னணு சாதனங்களில் ஏற்படும் கோளாறுகள், மின் கசிவு, மின் உராய்வு, வயர்களில் உரசும் மரக் கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகளை மின்வாரியத்துறை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மூலம் சரி செய்து வருகின்றது. ஆகையால், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் முன்கூட்டியே இது குறித்து தெரிவிக்கப்படுகின்றன. இந்த முன் அறிவிப்பினால் மக்கள் அனைவரும் மின் சார்ந்த பணிகளை முன்னதாக செய்து முடிக்க ஏதுவாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, ராஜபாளையம் கோட்டகத்திற்கு உட்பட்ட ரெட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி, முடங்கியார் பகுதிகளில் உள்ள மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சுற்றி உள்ள பகுதிகளான அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், காமாட்சிபுரம், சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், சங்கம்பட்டி, திருவெங்கடபுரம்,சோழபுரம், தேசிகாபுரம், நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள் புரம், முதுகுடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.
தமிழக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த அறிவிப்பு – அமைச்சர் தகவல்!
மேலும், பழையபாளையம் பகுதிகளான ராஜூக்கள் கல்லூரி, மலையாபுரம், தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், சோமையாபுரம், சம்மந்தபுரம், சின்ன மற்றும் பெரிய சுரைக்காய்பட்டி, பழைய பாளையம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பஸ் நிலையம், பெரியகடை பஜார் மற்றும் ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சம் தவிர்த்தான், வேப்பங்குளம், என்.புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னி தேவன் பட்டி, அட்டை மில் முக்கு ரோடு, அய்யனார் கோவில் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அறிவித்துள்ளார்.