தமிழகத்தில் நாளை (ஜூன்.5) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் நடைபெறும் பராமரிப்பு பணி, நாளை அம்பாசமுத்திரம் பகுதியில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெற உள்ளதால் கருவேலம்பட்டி -பகுதியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரியம் அறிவிப்பு:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி, மாதம் ஒரு முறை நடைபெறும். இந்த வகையில் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மின்வாரிய துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் முக்கிய காரணம் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின் கசிவு மூலம் விபத்துகள் நடைபெறுகிறது. இதை தவிர்ப்பதற்காக பராமரிப்பு பணி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து மின்நிலையங்களில் அடிக்கடி ஏற்படும் மின் தடைகளை தடுப்பதற்கும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின் வயர்கள், கம்பிகள் போன்றவைகள் மாற்றம் செய்யப்பட்டு மின் பாதைகள் சரி செய்யப்படுகிறது. மேலும் மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகளும் பராமரிப்பின் போது நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் ஒரு சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும்.
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
இந்த மின்தடை குறித்து முன்னதாகவே துணை மின் நிலைய மின்வாரிய செயற்பொறியாளருக்கு அறிவிப்பு தெரிவிக்கப்படும். இந்த வகையில் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மின் பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. இதனால் கருவேலம்பட்டி சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.