தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
லாஸ்பேட்டை பகுதியில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின் தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் பயனர்களுக்கு தடையில்லா மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின்விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ளவைகளை கண்டறிந்து சரி செய்யப்படுகிறது. மேலும் மின் வயர்கள், கம்பிகள் போன்றவைகள் மாற்றம் செய்யப்படுகிறது. மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்கின்றனர்.
ExamsDaily Mobile App Download
மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை லாஸ்பேட்டை பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், நாவற்குளம்.டாக்டர் அன்னிபெசன்ட் நகர், கணபதி நகர், சின்ன கண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர் நகர், வாசன் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், பொதிகை நகர், தில்லைக்கண்ணு அம்மா நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், புதுப்பேட்டை, ராஜாஜி நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முழு ஊரடங்கு தளர்வு – நகர நிர்வாகம் அனுமதி!
மேலும், சாந்தி நகர், வள்ளலார் நகர், கலைவாணி நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், லஷ்மி நகர் மற்றும் விரிவாக்கம், வரதராஜா பிள்ளை நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர், இடையன்சாவடி ரோடு, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்) மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். என்.ஆர் ராஜ் நகர், காந்தி, , பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.