நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூன் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில், ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணி தவறாமல் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் இருக்கும். இந்த வகையில் நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை (ஜூன் 8 ) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பின்படி, நாளை 08.06.2022 புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சமய சங்கிலி துணை மின்நிலைய பகுதியில் உள்ள சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்ஜி.ஆர் நகர், சில்லிங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், பவானி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் ஹாப்பி நியூஸ்!
இதேபோல் வெப்படை துணை மின் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளான வெப்படை, பாதனர இந்திரா நகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், எலந்தகுட்டை, தாண்டாங்காடு, காந்திநகர், சின்னார்பா ஊளயம், இ.காட்டூர், புது மண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன் கோயில், வெடியரசம்பாளையம், செம்பாற்காடு, சின்னாக்கவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம், எளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.