தமிழகத்தில் நாளை (ஆக. 4) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட உள்ளதாக மின் செயற்பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார். மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுகிறது என்று புகார்கள் எழுந்து வருகின்றன. இதற்கு நாட்டில் மின் உற்பத்தி குறைய தொடங்கியதே காரணம் என்று ஒரு சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை சரி செய்யும் வகையில் தமிழக மின்சார வாரியம் மத்திய அரசுடன் பல்வேறு மின் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் பல வகைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தி செய்வது அதிகரித்து வருகிறது. விவசாயத்திலும் இந்த வகை மின் உற்பத்தி பெரிதும் பயன்படுகிறது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தற்போதைய அரசானது தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதுமட்டுமின்றி மாதந்தோறும் மின் கணக்கீடு திட்டத்தையும் விரைவில் செயல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துணை மின் நிலையங்கள் மூலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த துணை மின் நிலையங்களை சரியாக பராமரிப்பதன் மூலம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட வாரியாக மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
தமிழக 11,12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மறு கூட்டல் & மறு மதிப்பீடு முடிவுகள் வெளியீடு
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சித்தாலம்பத்தூர், இந்திரா நகர், காந்தி ரோடு காலனி, மம்சாபுரம், புதுப்பட்டி, செண்பகத்தோப்பு, காந்திநகர் இடையன்குளம், வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கரிசல்குளம், லட்சுமிபுரம், படிக்காசு, வைத்தான்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின் செயற்பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.