திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூன் 27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை ஜூன் 27ந் தேதி திங்கட்கிழமை அன்று குள்ளனம்பட்டி பகுதியில் உள்ள மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் காலை முதல் மதியம் வரை மின்தடை அமல்படுத்தப்படும் என அம்மாவட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மின்தடை:
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏனென்றால் மின்கம்பங்களில் ஏற்படும் மின்கசிவு மற்றும் மின் பாதையில் நிகழும் சில பிரச்சனைகளால் விபத்துகள் நேரிடுகிறது. இவற்றை தவிர்ப்பதற்காகவே மாதம் ஒருமுறை பராமரிப்பு பணி கட்டாயமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பணி நடைபெறும் பொழுது ஆங்காங்கே மின் விநியோகமும் தடை செய்யப்படும்.
TN Job “FB Group” Join Now
அவ்விதமாக நாளை ஜூன் 27ல் திண்டுக்கல் மாவட்டத்தில் குள்ளம்பட்டி யில் உள்ள அங்கு நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை (திங்கட்கிழமை) அன்று அங்குநகர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் அசோக்நகர், பிள்ளையார் பாளையம், பாண்டியன் நகர்,
ஆர்த்தி தியேட்டர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், போடிநாயக்கன்பட்டி, ஸ்பென்சர் காம்பவுண்டு, ஆரோக்கியமாதா தெரு, மென்டோன்சா காலனி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.