ரோஹித் பற்றிய உண்மையை கண்டுபிடித்த வெண்பா, வைர நெக்லஸ் வாங்கி வந்த ரோஹித் – “பாரதி கண்ணம்மா” ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ரோஹித் பணக்காரன் இல்லை என்ற உண்மை வெண்பாவிற்கு தெரிய வருகிறது. ஆனால் அந்த நேரம் ரோஹித் வெண்பாவிற்கு வைர நெக்லஸ் வாங்கி வருகிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி கண்ணம்மாவை விட வெண்பா ரோஹித் கதை அதிகமாக காட்டப்பட்டு வருகிறது. வெண்பாவை திருமணம் செய்ய ஷர்மிளா ரோஹித்தை மாப்பிள்ளையாக அழைத்து வருகிறார். ரோஹித் ஒரு ஏழை ஆனால் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளதாக சொல்லி வெண்பாவை ஏமாற்ற பார்க்கிறார். ஷர்மிளா வெண்பா மனதில் ரோஹித் இடம் பிடிக்கும் வரை ஒரே வீட்டில் தங்கலாம் என சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை, PF வட்டி விகிதம் – சூப்பர் அறிவிப்புகள்!
தினமும் பல வேலைகளை செய்து ரோஹித் வெண்பா மனதில் இடம் பிடிக்க பார்க்கிறார். ஆனால் வெண்பாவிற்கு பாரதி மீது தான் காதல் இருக்கிறது. பாரதி அவமானப்படுத்தியதை நினைத்து வெண்பா வருத்தப்படுகிறார். மறுபக்கம் பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்வேன் என உறுதியாக இருக்க ஹேமாவிற்கு அந்த விஷயம் தெரிந்து அழுது புலம்புகிறார். அதனால் பாரதி வேறு வழியில்லாமல் விவாகரத்து வாங்கமாட்டேன் என சொல்கிறார்.
அதை கேட்டு லக்ஷ்மியும், கண்ணம்மாவும் சந்தோசமாக இருக்கின்றனர். இப்படி கதை சென்று கொண்டிருக்க ரோஹித் கூட்டாளி ஒருவன் போன் செய்ய அதை சாந்தி எடுத்து விடுகிறார். கடன்காரன் சண்டை போடுவதாக அவன் சொல்ல அப்போ ரோஹித் ஒரு பிராட் என சாந்தி கண்டுபிடித்து வெண்பாவிடம் சொல்கிறார். வெண்பா அதை கேட்டு ரோஹித்திடம் சண்டை போடுகிறார். ரோஹித் உனக்காக தான் நான் வைர நெக்லஸ் வாங்கி வந்தேன் என சொல்ல இது போலியானது என வெண்பா சொல்கிறார். பின் சேட்டு ஒருவரை அழைத்து இது உண்மையான வைரமா என பார்க்க சொல்கிறார்.