நாளை முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் சட்ட விதிகளில் பாதிப்புகள் உள்ளதா? முழு விவரம் இதோ!
வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை, நான்கு நாட்கள் மட்டுமே பணிகள் என்றாலும் ஊழியர்கள் வாங்கும் சம்பளம் குறைவாக இருக்கும் என்ற புதிய தொழிலாளர்கள் விதி வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் (நாளை) அமலுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம், விடுப்பு மற்றும் வேலை நேரம் மாற்றம்:
புதிய தொழிலாளர் விதிகள் முக்கிய மாநிலங்களில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. மேலும் புதிய விதிகள் அமலுக்கு வந்தால், ஊழியர்கள் எத்தனை மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்பதிலும் மாற்றங்கள் வரும். தற்போது பெரும்பாலான நிறுவனங்களில் பணி நேரம் 8-9 மணி நேரங்களாக உள்ளது. ஆனால், புதிய விதிகளின்படி இது 12 மணி நேரமாக நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. எனவே, ஒருவர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்தால் அவர்களுக்கு மூன்று நாட்கள் வார விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
Exams Daily Mobile App Download
தனிப்பட்ட நிறுவனங்களைப் பொறுத்து இந்த 48 மணி நேர பணி என்பது 4 நாட்கள், 5 நாட்கள் அல்லது 6 நாட்களில் பிரித்து வழங்கப்படலாம். இது ஒரு ஊழியரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை பாதிக்கலாம், இம்மாற்றம் அவர்களுக்கு பலனளிக்காது. மேலும் பாதுகாப்பு, உடல் நலம், பணிச்சூழல் (தொழில் பாதுகாப்பு, உடல் நலம், பணிச் சூழல் விதிமுறைகள்) குறித்துப் பேசும் சட்டப்பிரிவு 25 (1)இன் கீழ், ஊழியர்களை ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வைக்கக் கூடாது. ஆனால், பிரிவு 25(1)(பி)இன் படி, நிறுவனங்கள் அவர்களை 12 மணி நேரம் வரை வேலை செய்ய வைக்க முடியும்.
ஏகபோக வரவேற்பை பெறும் கழிவறை நீர் ‘பீர்’ – இப்படியும் நடக்குமா? ஆச்சரியத்தில் மக்கள்!
பிரிவு 26(1)இன் படி, ஊழியர்கள் வாரத்தில் ஆறு நாட்களுக்கு மேல் வேலை செய்யக் கூடாது. இந்த விதியை தளர்த்தும் அதிகாரம், பிரிவு 26(2)இன் படி அரசுக்கு உள்ளது. மேலும், ஊழியர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படவில்லை என்றால், அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் அந்த விடுமுறைகளை ஈடுகட்ட வேண்டும். எனவே, புதிய விதியின்படி, ஊழியர்களின் 50% வருமானம் அடிப்படை சம்பளமாக காட்டப்பட வேண்டும். இதன்மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்) ஊழியர்களின் பங்கு அதிகரிக்கும். இதனால், தனியார் துறையில் பணிபுரிபவர்களின் ‘டேக் ஹோம்’ வருமானம் குறையும் என, தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் கூறுகின்றனர்.