ஏகபோக வரவேற்பை பெறும் கழிவறை நீர் ‘பீர்’ – இப்படியும் நடக்குமா? ஆச்சரியத்தில் மக்கள்!
மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவறை நீரிலிருந்து தயாரிக்கப்படும் பீர் வகைகள் சிங்கப்பூர் மக்களிடம் பெருமளவு ஆதரவுகளை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
கழிவறை நீர் பீர்
உலகத்தின் ஏதோவொரு மூலையில் வழக்கத்திற்கு மாறாக வினோதமான அல்லது வித்தியாசமான நிகழ்வுகள் தினந்தோறும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் திடீரென தோன்றும் நீரூற்று, ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகள் என பல ஸ்வாரசியமான நிகழ்வுகள் நடந்திருப்பதை கேட்டிருப்போம். ஆனால், இப்போது சிங்கப்பூரில் நிகழ்ந்து வரும் ஒரு விஷயம் உலக நாடுகளை சேர்ந்த மக்களின் கவனம் ஈர்த்து வருகிறது. அதாவது, சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட நீரில் இருந்து புதிய வகை பீர்கள் தயாரிக்கப்படுவதாகவும், இது கடந்த பத்தாண்டுகளில் அந்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கடந்த 2003ம் ஆண்டில் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கிடைத்த கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்து சிங்கப்பூரின் குடிநீரின் பிராண்டான NEWBrew புதிய பீர் வகையை தயாரித்துள்ளது. இந்த நடவடிக்கை, நிலையான நீர் பயன்பாடு மற்றும் மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை சிங்கப்பூர் மக்களுக்கு உணர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதாக நாட்டின் தேசிய நீர் நிறுவனமான PUB கூறியுள்ளது. அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டில் நீர் மாநாட்டில் முதன்முதலில் வெளியிடப்பட்ட இந்த NEWBrew பின்னர் சூப்பர் மார்க்கெட்களிலும், Brewerkz விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்கு வந்தது.
பொது மக்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – நாளை முதல் ‘இதனை’ பயன்படுத்த தடை!
இப்போது, மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவறை நீரிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த பீர் சிங்கப்பூர் மக்களின் வரவேற்பை வென்றுள்ளது. அதே நேரத்தில் மற்ற இடங்களில் உள்ள மதுக்கடைகளும் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீரைக் கொண்டு இது போன்ற பீர்களை தயாரிக்க முன்வந்துள்ளது. இந்த பீர் குறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், இது கழிப்பறை தண்ணீரால் ஆனது என்று என்னால் சொல்ல முடியவில்லை என்றும் ஃப்ரிட்ஜில் இருக்கும் பீர் மாதிரியே இதன் ருசி இருக்கிறது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதையெல்லாம் மனிதர்கள் குடிப்பார்களா என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த கழிவுநீர் பீர் வியாபாரம் சிங்கப்பூரில் சக்கைபோடு போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.