தமிழக பள்ளிகளில் மீண்டும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படப் போவதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வெளியான தகவலுக்கு தற்போது பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆசிரியர் நியமனம்:
தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 2021 – 2022 ம் கல்வியாண்டு முதலே மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் இல்லை என்ற பற்றாக்குறை நிலவியது. இதனால் ஒரே ஆசிரியரே அதிக பணிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. மேலும் கற்பித்தலிலும் தொய்வு ஏற்பட்டது. அதனால் உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியானது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் 13,331 காலிப்பணியிடங்கள் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுகள் நடத்தி நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்தும் வரையில் 13,331 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடங்களுக்கு மாதம் ரூ. 7,500 தொகுப்பூதிய அடிப்படையிலும், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.10,000 ஊதியமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த பணியிடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மாணவர்களுக்கான அறிவிப்பு – அமைச்சர் வெளியிட்ட தகவல்!
இப்பணிக்கு 12 வது தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் B.Ed, படித்தவர்கள் இந்த தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள். மேலும் வயது வரம்பு 18ல் இருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இந்த தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது மேலும், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.