NEET தேர்வு அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!

0
NEET தேர்வு அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - அரசு அறிவிப்பு!
NEET தேர்வு அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - அரசு அறிவிப்பு!
NEET தேர்வு அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!

புதுச்சேரியில் நீட் தேர்வு அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள சென்டாக் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி அரசு:

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படாமல் இருந்தது. மேலும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளும், சுழற்சி முறை வகுப்புகளும் நடத்தப்பட்டு வந்தன. இதே போல் கல்லூரிகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது தொற்று குறைய தொடங்கியதால் இந்தியாவில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட தொடங்கி உள்ளன. நடப்பு ஆண்டில் 10,12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகளும் நடத்தப்பட்டது.

நாட்டில் 1253 ரயில் நிலையங்கள் புதுப்பிப்பு – மத்திய மந்திரி விளக்கம்!

இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் அரசு கலை கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடந்த மாதம் முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. அதன்படி இதுவரை பொறியியல் படிப்பில் சேர 1.91 லட்சம் பேரும், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர சுமார் 3.95 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இதே போல் புதுவையில் இன்ஜினீரிங், கலை அறிவியல் உட்பட பல்வேறு படிப்புகளில் சேர்வதற்கான சென்டாக் ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மாதம் 8 ம் தேதி முதல் பெறப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த 29ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் சமீபத்தில் தான் மகளிர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்தது. இதனை தொடர்ந்து கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையில் இளநிலை நீட் தேர்வு அல்லாத படிப்புகளான தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல், வணிகவியல் படிப்புகளில் சேர புதிதாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள சென்டாக் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!