அடுக்குமாடி குடியிருப்பு கழிவுகள்.. முறையாக அகற்ற உத்தரவு… மீறினால் உரிமம் ரத்து.. அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தும் வெளியேறும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவது இல்லை என்று புகார்கள் வந்துள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் கழிவுகளை முறையாக கொட்டாத லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கழிவுகள்:
தமிழகத்தின் தூய்மை பணியாளர்கள் குப்பை கொட்டும் வாகனங்கள் மூலம் மக்களின் வீடுகளுக்கே சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கி வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
இதில் மக்காத குப்பைகள் மறு சுழற்சிக்கு அனுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. அதாவது அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுகள் அனைத்தும் லாரிகளின் மூலமாக எடுத்து செல்லப்பட்டு அகற்றப்படுகிறது.
இவ்வாறு கொண்டு செல்லும் லாரிகள் அந்த கழிவுகளை முறையாக கொட்டுவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுக்க அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுகளை முறையாக கொட்ட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு கொட்டாத லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.