தமிழக மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர்கள் பணி மாற்றம் – மாதம் ரூ. 18,000 ஊதியம்.. அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்கள் பணி நீட்டிப்பு செய்யப்பட மாட்டார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்த செவிலியர்கள்:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது ஏற்பட்ட மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் 2,300 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டனர். தொற்று வேகமெடுத்து பரவிய அத்தகைய சூழலிலும் தன் நலம் கருதாது கொரோனா நோயாளிகளுக்கு இரவு பகலாக சிகிச்சை அளித்தனர்.
நாட்டின் 5G இணைய சேவையின் வேகம் முக்கிய பகுதிகளில் அதிகரிப்பு – அரசின் கோரிக்கை!
Follow our Twitter Page for More Latest News Updates
அறிவிக்கப்பட்ட ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் அரசு ஒப்பந்த செவிலியர்களுக்கான பணியை நீடித்தது. நீடிக்கப்பட்ட ஒப்பந்த காலம் கடந்த டிச. 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் ஒப்பந்த செவிலியர்களின் பணி காலம் நீடிக்கப்பட மாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஒப்பந்த செவிலியர்களுக்காக பணியாற்றியவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அவர்களின் நலன் கருதி தற்போதைக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். இவர்களுக்கு மாதம் ரூ .18,000 ஊதியமாக வழங்கப்படும். மேலும் செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.