மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மற்றொரு அகவிலைப்படி (DA) உயர்வு? AICPI தரவுகள் கணிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்திற்காக அகவிலைப்படி தொகை 3% உயர்த்தப்பட்டு இப்போது 34% ஆக இருக்கும் நிலையில், அவர்கள் ஜூலை மாதத்திற்கான 3% DA தொகையையும் பெறுவார்கள் என ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளது.
அடுத்த DA உயர்வு
கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை அரசு 34% ஆக உயர்த்தி அறிவித்தது. இதனை தொடர்ந்து ஜூலை மாதத்தில் அரசு ஊழியர்கள் இன்னும் சில நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் ஊடக அறிக்கைகளின்படி, அரசாங்கம் வரும் மாதங்களில் அகவிலைப்படியில் மற்றொரு உயர்வை அறிவிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. வழக்கமாக, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஜூன் வரை முதலாம் தவணை DA தொகை வழங்கப்படுகிறது. மேலும், இரண்டாவது தவணை தொகை ஜூலை முதல் டிசம்பர் வரை வழங்கப்படுகிறது. இப்போது 2022 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படியின் முதல் அதிகரிப்பு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் மாதத்திற்கான AICPI குறியீட்டின் அதிகரிப்பு காரணமாக ஜூலையில் அடுத்த திருத்தம் செய்யப்படலாம் என்று புதிய அறிக்கைகள் கூறுகின்றன. இந்த டிஏ திருத்தம் குறித்து முடிவெடுப்பதில் ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிவிவரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
Canara வங்கியில் மாதம் ரூ.70000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மே 20ம் தேதி கடைசி நாள்!
அதன்படி, டிசம்பர் 2021 இல், AICPI எண்ணிக்கை 125.4 ஆக இருந்தது. ஆனால், ஜனவரி 2022ல், அது 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக இருந்தது. தொடர்ந்து பிப்ரவரி, 2022க்கான அகில இந்திய CPI-IW 0.1 புள்ளிகள் குறைந்து 125.0 ஆக இருந்தது. இப்போது, 1 சதவீத மாற்றத்தில், இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 0.08 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கிடையில் 2022 மார்ச் மாதத்தில், AICPI எண்ணிக்கை 1 புள்ளி ஏற்றம் கண்டுள்ளது. அந்த வகையில் மார்ச் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் 126 ஆக உள்ளது. இதனால் DA உயர்வு இருக்கும் என தகவல்கள் கூறுகிறது.
இந்த அறிக்கைகளை நம்பினால், அடுத்த தவணைக்கான DA மேலும் நான்கு சதவிகிதம் உயர்த்தப்படலாம். இதன் பொருள் மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த DA 38 சதவீதத்தை எட்டும். முன்னதாக சுமார் 1.16 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில், மத்திய அமைச்சரவை மார்ச் 30 அன்று அகவிலைப்படி தொகையை 3 சதவீதம் உயர்த்தி 34 சதவீதமாக அறிவித்தது. இந்த கூடுதல் தவணைத் தொகை ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும். மேலும், 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின்படி இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.