நாட்டில் தோன்றிய மற்றொரு ஆபத்தான வைரஸ் – தடுப்பூசிக்கும் பயப்படாது! எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றானது உலகம் முழுவதும் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது. இது போன்று மற்றொரு ஆபத்தான வைரஸ் சீன நாட்டில் தோன்றியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோஸ்தா வைரஸ்
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் ஆனது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸுக்கு எதிராக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் தடுப்பூசி மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றம் அடைந்து முன்பை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக மாற்றமடைகிறது. இந்நிலையில் தற்போது அனைத்து துறைகளும் மீண்டு வருகிறது.
அதன்படி உலக பொருளாதாரமும் மீண்டும் பழைய நிலைக்கு முன்னேறி வருகிறது. இந்த நிலையில் ரஷியாவில் கொரோனா பெருந்தொற்றை போன்று மற்றொரு ஆபத்தான வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது வெளவால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு புதியவகை வைரஸ் ஒன்றை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய வகை வைரஸிற்கு கோஸ்தா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸானது SARS-CoV2 என்ற கொரோனா தொற்றின் வகையை சார்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் இந்த வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாவது, கோஸ்தா வைரஸ் தொற்றும் மனித உடம்பில் சுவாச பாதையை பாதிக்கும் என்றும் கொரோனா போன்று உருமாறி கொண்டே இருக்கும் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் கோஸ்தா வைரஸின் முதல் வகையானது கடந்த 2020ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது அந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோஸ்தா வைரஸின் 2வது வகை மனிதர்களிடையே பரவினால் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர். அத்துடன் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் கோஸ்தா வைரஸுக்கு எதிராக செயல்படாது என்றும் கூறியுள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்