தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கட்டாயம் இந்த வகுப்புகளுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
தமிழக பள்ளிகளில் கட்டாயம் ஆர்எஸ்எஸ் வகுப்புகளுக்கு அனுமதி இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆர்எஸ்எஸ் வகுப்புகள்:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் இடையே ஜாதி, மத வேறுபாடு இருக்க கூடாது என்பதால், அரசு இது குறித்து நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் ஜாதி அடிப்படையில் கையில் கயறு கட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட கூடாது என பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஆர்எஸ்எஸ் அணி வகுப்பிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தஞ்சை மாவட்டம் தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட போரின் போது அங்கே சிக்கி தவித்த தமிழ் மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதே போல மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழ் மாணவர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
தமிழக இல்லத்தரசிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை? – அமைச்சர் அறிவிப்பு!
அவரிடம் பாஜக விமர்சனம் செய்வது பற்றி கேட்டதற்கு நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தவர்கள் பேசும் தேவை இல்லாத கருத்தை நினைக்காமல் நல்லவித பணிகளை செய்வோம் என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிகளில் ஆர்.எஸ்எஸ் வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால் பொது இடங்களில் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதற்கு எதிராக நாம் செயல்படக் கூடாது என நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதை சுட்டிக்காட்டி பேசினார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்