தமிழக இல்லத்தரசிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை? – அமைச்சர் அறிவிப்பு!
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகையாக வழங்கப்படுவதாக அரசின் வாக்குறுதி குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டம் குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பெண்களுக்கு உரிமைத்தொகை:
கடந்த 2021-ம் ஆண்டு தமிழத்தில் சட்டப்பேரவை தேர்தல் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. கிட்டத்தட்ட 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி தான் நடந்து வந்தது. இதனால் திமுக, ஆட்சியை கைப்பற்ற தேர்தல் பிரச்சார வாக்கு சேகரிப்பில் அதிக வாக்குறுதிகளை அளித்தனர். தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்ததும் அறிவித்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியும் வருகின்றனர்.
ஆனால், பலரும் எதிர்பார்த்த குடும்ப தலைவிகளுக்கான ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும், இந்த திட்டத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் பலமுறை கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்குவது குறித்த தகவல் ஒன்றை தற்போது தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
SBI வங்கி பயனரா நீங்கள்? நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய தகவல் – முழு விவரம் உள்ளே!
Exams Daily Mobile App Download
அதன்படி, பெண்களுக்கு அளிக்கப்படும் தொகையானது குடும்ப அட்டையை அடிப்படையாக வைத்தே கொடுக்கப்படும். இதனால், மாதம் தோறும் ரூ.1,000 அளிக்கும் அரசின் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக குடும்பத்தின் உண்மை தன்மையை அரசு விசாரித்து வருவதாகவும், கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள் சீரமைக்கப்பட்ட பின்னர், மக்களுக்கான திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்