1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆண்டு இறுதித்தேர்வு தொடக்கம்!

0
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆண்டு இறுதித்தேர்வு தொடக்கம்!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆண்டு இறுதித்தேர்வு தொடக்கம்!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆண்டு இறுதித்தேர்வு தொடக்கம்!

கேரளாவில் உள்ள பள்ளிகளில் நேற்று இருந்து 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறத் துவங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் அடுத்தாக வரும் கோடை விடுமுறையை மனதில் வைத்து ஆர்வமுடன் தேர்வுகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

ஆண்டு இறுதித்தேர்வுகள்:

இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்திலும் கொரோனா தொற்று தலை தூக்கி இருந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் சென்ற ஆண்டு இறுதியில் தான் கொரோனா தொற்று சற்று குறைந்த காரணத்தால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டு இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அந்தந்த மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.

மார்ச் 25 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அதிகாரி விளக்கம்!

அதனை தொடர்ந்து தற்போது கேரளாவிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு நேற்று துவங்கியது. மேலும் மாநிலத்தில் 2019 – 2020 கல்வியாண்டின் இறுதியில் கொரோனாவால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஒன்று முதல் 9 ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப் படவில்லை. ஆனாலும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. மேலும் தற்போது நடந்து வரும் கல்வியாண்டில் 2021 நவம்பர் ஒன்றில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனிடையே 2022 ஜனவரி 21 முதல் பிப்.,13 வரை கொரோனாவால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

அதன்பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வு நேற்று துவங்கியது. மாநிலத்தில் 34,37,570 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் 92,723 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதனை தொடர்ந்து மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடக்க இருப்பதால் அந்த நாட்களில் மட்டும் தேர்வுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த தேர்வுகள் அடுத்த மாதம் ஏப்ரல் 2ஆம் தேதி முடிவடைய உள்ளது. அடுத்தாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் 31ஆம் தேதி நடக்க உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 11,628 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!