Post Office அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – விதிகள் மாற்றம்!

0
Post Office அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - விதிகள் மாற்றம்!
Post Office அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - விதிகள் மாற்றம்!
Post Office அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – விதிகள் மாற்றம்!

அக்டோபர் 1 ஆம் தேதி அஞ்சல் நிலைய கணக்குகளில் நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட விதிமுறைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

விதிமுறைகள்:

இந்தியாவில் அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்குகள் மக்களிடம் நம்பக தன்மையை பெற்றுள்ளது. அஞ்சலங்கள் வங்கிகளை போன்று பொது மக்களின் சேமிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்க பல முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது.அஞ்சல் நிலையங்களில் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் சிறந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது. வைப்பு நிதி, தொடர் வைப்புக்கணக்கு, கால வைப்புக்கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமான திட்டம் என அஞ்சலங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது.

இன்று முதல் 4 நாட்கள் தொடர் வங்கி விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இதன் மூலம் ஏழை எளிய மக்கள் சிறுக சிறுக சேமிக்க தொடங்குகின்றனர். அஞ்சலகங்களில் உள்ள சேமிப்பு திட்டங்களில் ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது. இந்த நிலையில் கடந்த 1 ம் தேதி அஞ்சல் நிலைய கணக்குகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. அதன் படி அஞ்சலக டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் பாயின்ட் ஆஃப் சர்வீஸ் மூலம் பணம் எடுக்க 1% செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு முறை பண பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் 5 ரூபாய் என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு!

மேலும் போஸ்ட் ஆபீஸ் ஏடிஎம்களில் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு, வாடிக்கையாளர்கள், முதல் ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5+ஜிஎஸ்டி செலுத்தவேண்டும்.மெட்ரோ நகரங்களில் 3 இலவச பரிவர்த்தனைகள், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகள், அதை தாண்டினால் ரூ.8 +ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அஞ்சலக ஏடிஎம்களில் 5 முறைக்கு மேலான பணப் பரிவர்த்தனைகளுக்கு ரூ.10+ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றும் மாற்றப்பட்ட இந்த விதிமுறைகள் அடுத்த வருடம் 2022 செப்டம்பர் மாதம் 30 வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!