தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு!

தமிழகத்தில் நவ 1ம் தேதி முதல் 8ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியர் உத்தரவு:

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவும் விகிதத்தை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவும் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது. எனவே தமிழகத்தில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை – அதிக வரவேற்பை பெறும் புதிய அறிவிப்பு!

அதனை தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறை தூய்மை, வளாகத் தூய்மை, குடிநீர் தொட்டி, கழிப்பறை தூய்மை, பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை, மின் இணைப்பு பராமரிப்பு ஆகியவற்றை பள்ளிகள் திறப்பதற்கு முன் குழு அமைத்து ஆய்வு செய்யவும், வகுப்பறை மற்றும் வளாகங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யவும், வகுப்பறைகளின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பள்ளிகளில் வகுப்புகள் சுழற்சி முறையில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு இல்லை – அரசுக்கு கோரிக்கை!

அதேபோல் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்காணும் பணிகள் நடைபெற்று வருவதை அதிகாரிகள் குழு கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் அனைவரும் மாஸ்க் அணிவதை உறுதி செய்யவும், தெர்மல் ஸ்கேனர் மற்றும் தேவைப்படும் நேரங்களில் ஆக்சிமீட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!