அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மறுவாய்ப்பு – தேர்வு கால அட்டவணையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!
அண்ணா பல்கலைக்கழகம் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மறு வாய்ப்பளிக்கும் விதமாக தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. பகுதி நேரம் மற்றும் முழு நேரம் பயில கூடிய UG மாணவர்களுக்கு தனித்தனியாக தேர்வு தேதிகள் வழங்கப்பட்டுள்ளது.
கால அட்டவணை:
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் 2001–2002 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்படி அம்மாணவர்கள் இம்மாதம் நடைபெறும் அரியர் தேர்வில் பங்கேற்ற அனுமதிக்கப்பட்டனர்
அதனை தொடர்ந்து தற்போது கடந்த முறைகளில் நடைபெற்ற இளங்கலை செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கும் விதமாக அடுத்து நடைபெறவிருக்கும் தேர்வில் பங்கேற்கலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அரியர் மற்றும் ஸ்பெஷல் அரியர் வைத்துள்ள மாணவர்களும் முழு மற்றும் பகுதி நேரம் பயிலும் மாணவர்களும் இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானில் பெண்களின் உரிமைகள் மறுப்பு – ஐ.நாவின் அதிரடி அறிவிப்பு.. அதிர்ச்சியில் தலிபான்கள்!
Exams Daily Mobile App Download
தற்போது இந்த அரியர் தேர்வுக்கான கால அட்டவணையை அண்ணாபல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் பாடவாரியாக காலை மற்றும் மாலை நடைபெறும் தேர்வின் தேதி மற்றும் நேரம் குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அரியர் வைத்துள்ள மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.