அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.35,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!
08.04.2022 ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate பணிக்கு ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விண்ணப்பதாரர் இப்பதிவை முழுவதுமாக படித்து, தேவையான தகவல்களை தெரிந்து கொண்டு பின்னர் சுலபமாக இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Anna University வேலைவாய்ப்பு விவரங்கள்:
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ECE / Instrumentation / Biomedical / Medical Electronics பாடப்பிரிவில் கட்டாயம் B.E டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் PG / Ph.D டிகிரி முடித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Biomedical Signal Processing and Embedded Programming போன்ற பணி சார்ந்த துறைகளில் அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம். விண்ணப்பதாரர் C, MATLAB, Python, Signal Processing & Conditioning ஆகிய கணினி மென்பொருள் மொழிகளில் நன்கு திறன் பெற்றவர்களாக இருப்பது அவசியமாகும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து Shortlist செய்யப்படுவார்கள், அதன்பின் Written Test மற்றும் Interview ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ExamsDaily Mobile App Download
இவ்வாறு பணிக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் பெற்றிருக்கும் நபர்களை தேர்வு செய்து, பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம். இப்பணிக்கு விரும்புவோர், அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு அஞ்சல் (Post) செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (22.04.2022) கடைசி தினமாக உள்ளதால் இன்றே விண்ணப்பித்து பயனடையலாம்.