கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை – நீதிபதி புதிய உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து இரண்டாவது முறை உயர்நீதிமன்றம் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட நிலையில், அதன் அறிக்கையை புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
கடந்த சில நாட்களாக தமிழக மக்களிடம் அதிகம் பேசப்படும் செய்தியாக கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்தி இருக்கிறது. இது கொலையா தற்கொலையா என தொடங்கிய வழக்கு கடந்த 17 ஆம் தேதி வன்முறையாக மாறியது. மாணவிக்கு நீதி வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடு பட பின் பள்ளி வளாகத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பள்ளியை தீக்கிறையாக்கினார்கள். அதன் பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
Exams Daily Mobile App Download
அந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் மனுதாரரிடம் பல கேள்விகளை எழுப்பியது. அதன் பின் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யும் போது மாணவியின் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் உடன் இருக்கலாம் என உத்தரவிடப்பட்டது. ஆனால் பெற்றோர்கள் அதற்கு சம்மதிக்காமல் மாணவி உடலை தங்களது தரப்பு மருத்துவர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
CBSE பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் – அரசு வெளியீடு!
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு மருத்துவரை குறை சொல்ல நீங்க யார் என கேள்வி எழுப்பி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற அறிவுரையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்ததையடுத்து நீதிபதி உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.