12ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி – ஆம்பூரில் அதிர்ச்சி!!
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கினால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மேலும், வழக்கம் போல் பள்ளிகள் ஜூன் மாதம் தொடங்கப்படாமல் இருந்தது.
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு அந்தந்த பள்ளிகளில் பருவத்தேர்வு!!
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததாலும், பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் நெருங்கி வரும் காரணத்தாலும், கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் அரசு, பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியது.
கொரோனா உறுதி:
பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தகுந்த சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளியில் உடன் பயின்ற 51 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்