தனது மகன் அர்ஷின் புகைப்படத்தை பகிர்ந்த ஆலியா, சஞ்சீவ் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
ஆலியாவிற்கு தற்போது தான் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரசிகர்கள் பலரும் குழந்தையின் முகத்தை காட்டும்படி கேட்டதால் முதன் முறையாக ரசிகர்களுக்காக தனது மகன் அர்ஷ்ஷின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஆலியாவின் மகன்:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பபட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் ஆலியா. இவர் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்கிற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்த பிறகு ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த சீரியலில் நடித்து கொண்டிருந்த போதே மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு ஆலியா கர்ப்பமானார். தற்போது இவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையுடன் இருக்கும் அழகிய தருணங்களை அவ்வப்போது சமூக வலை பக்கங்களில் பதிவிட்டபடி இருக்கிறார். ஐலா பாப்பா பிறந்த போது சஞ்சீவ் கொரோனா ஊரடங்கின் காரணமாக வீட்டில் தான் இருந்தார். இதனால் ஐலா பாப்பாவுடன் முழு நேரத்தையும் செலவிட்டு வந்தார். தற்போது சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரில் நடித்து கொண்டிருக்கிறார். இதனால் ஷூட்டிங் காரணமாக என்னால் அர்ஷ்சுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என கூறியுள்ளார்.
கோபி பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்டு ராதிகாவுடன் சண்டை போடும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!
உடனே ஆலியா அர்ஷ்காக லீவு போட்டு அவனை கவனித்துக்கொள்ளுங்கள் என கூறுகிறார். இதனை தொடர்ந்து முதன் முறையாக ஆலியா தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது ஐலா பாப்பாவிற்கு ஒரு குட்டி தம்பி வந்தவுடன் அவரும் குஷியில் இருக்கிறார். அடிக்கடி அர்ஷ் தூங்கும் போட்டு தொட்டிலை ஆட்டிவிட்டபடி இருக்கிறார். ஆலியா தற்போது அர்ஷ்சுடன் இருக்கும் ஒவ்வொரு அழகிய தருணங்களையும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.