2வது குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியலுக்கு கம் பாக் கொடுக்கும் ஆல்யா மானசா – ரசிகர்கள் வாழ்த்து!
ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமாகிய ஆலியா மானசா தற்போது முன்னணி நடிகைகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறார். சமீபத்தில் இரண்டாவது குழந்தையாக அர்ஷ் பிறந்ததை அடுத்து சீரியலுக்கு பிரேக் கொடுத்திருக்கும் ஆலியா மீண்டும் கம் பாக் கொடுக்கப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆலியா மானசா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியலில் அறிமுகமாகிய புதுமுக நடிகை தான் ஆலியா மானசா. இவருக்கு ஜோடியாக நடித்து வந்த சஞ்சீவ் அவர்களையே நிஜ வாழக்கையிலும் காதலித்து கரம் பற்றினார். தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த ஆலியா அவரது குழந்தைத்தனமான பேச்சாலும், துரு துரு நடவடிக்கையாலும் இன்று அதிகம் பேசப்படும் நடிகையானார். பெண்குழந்தை பிறந்ததை அடுத்து மீண்டும் சீரியலுக்கு என்ட்ரி கொடுத்து ராஜா ராணி 2ல் கமிட் ஆகி நடித்து வந்தார்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி வெண்பா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!
அதன் பிறகு மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பமாகிய ஆலியா நிறை மாத நாட்கள் நெருங்கும் வரை சீரியலில் நடித்து அதன் பிறகு விலகினார். ஆலியாவுக்கு ஆண் குழந்தை பிறக்க, முன்னதாகவே அவர் சொன்னபடி அந்த குழந்தைக்கு அர்ஷ் என்ற பெயரையும் வைத்தார். குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் சீரியலுக்கு வருவார் என எதிர் பார்த்த நிலையில் இனி சந்தியாவாக நான் நடிக்க போவதில்லை என கூறி ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்.
Exams Daily Mobile App Download
சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவ் ஆக இருக்கும் ஆலியா மானசா நீண்ட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது ஒரு ரசிகர் அடுத்து எப்போது சீரியலில் நடிக்க வருவீர்கள் என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்க்கு ஆலியா இன்னும் சில மாதங்களில் சீரியலில் நடிக்க வருவேன் என்று கூறியுள்ளார். மேலும், இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை வேடத்தில் காவ்யாவிற்கு பதிலாக நடிக்க வருகிறார் என பரவி வரும் வதந்தியை பார்க்கையில் ரசிகர்கள் ஒருவேளை இருக்குமோ? என குழம்பி உள்ளார்கள்.