ஐலா பாப்பா அர்ஷை சந்தித்த அழகான தருணம் – ஆலியா வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் உற்சாகம்!
தமிழ் சின்னத்திரை நடிகர்களில் மக்களிடம் நெருக்கமான தம்பதியான சஞ்சீவ் ஆலியா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தனது மகனும் மகளும் முதன்முறையாக பார்த்துக் கொண்ட அழகான தருணத்தை பற்றி ஆலியா வீடியோவாக வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆலியா சஞ்சீவ்:
தமிழ் சீரியல்கள் பார்க்க ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சஞ்சீவ் ஆலியா ஜோடி. சின்னத்திரையில் டாப் ஜோடி வரிசையில் இவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஐலா என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் ஆலியா மானசா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார்.
அவருக்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். மேலும் அர்ஷ் பிறந்து ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறார். பிரசவத்திற்கு பின் ஆலியா சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொன்ன நிலையில் அதில் தனக்கு இரண்டாவது பிரசவத்தை பற்றியும் சொல்லி இருக்கிறார். மேலும் ஐலா தன்னுடைய தம்பியை பார்த்த முதல் தருணத்தின் வீடியோவை ரசிகர்கள் கேட்டு இருக்கின்றனர்.
அப்போது ஆலியா அது குறித்த வீடியோவை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்தார். இரண்டாவது முறை அவருக்கு என்ன டெலிவரி என ரசிகர்கள் கேள்விக்கு இரண்டாவதும் தனது ஆப்ரேசன் தான் என சொல்லி இருக்கிறார். மேலும் அர்ஷ் புகைப்படங்களை வெளியிட வேண்டும் எனவும் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆலியா சஞ்சீவ் நடிப்பிற்காக அவர்களுக்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில் ஐலா பாப்பாவின் அழகான செயல்களை பார்க்கவும் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.