TNPSC துறைத்தேர்வுகள் அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழக அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான TNPSC தேர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. தேர்வானது ஜூன் 6 முதல் கணினி வழியில் நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
TNPSC:
தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கான TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு 2 வருடங்களுக்கு பிறகு 2022ம் ஆண்டு தான் வெளியாகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை உள்ளிட்ட 33 வகை பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப் 2,2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!
தேர்வு மே 21ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து, தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கான குரூப்4 & VAO தேர்வு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. சுமார் 7000 காலிப்பணியிடங்களை கொண்ட தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு ஆகும். 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இத்தேர்வை எழுதலாம். தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது.
அதனை தொடர்ந்து அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான TNPSC தேர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. ஊழியர்களுக்கான துறை தேர்வுகள், ஜூன் 6ம் தேதி தொடங்க உள்ளது. கணினி வழியில் தேர்வு ஜூன் 14 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் வாயிலாக தற்போது நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் ஊழியர்கள் ஆதார் விவரங்களை TNPSC இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.