தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவு பணியாளர் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய தேனி தனியார் மகாலில் ஏ.ஐ.டி.யு.சி அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்க மாநாடு நடந்தது.

தொழிலாளர் சங்கத்தின் மாநாடு:

துப்புரவு பணியாளர்கள் பொது இடங்களில் தூய்மையை பேணிக் காப்பது, புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுவது மற்றும் பேருந்து நிலையம், சந்தைகள், ஆலயங்கள், வணிக வளாகப் பகுதிகளில் உள்ள குப்பைகள், கழிவுகளை அகற்றி மேற்கொண்டு வரும் துப்புரவு பணிகள், மக்களின் நலனையும் பொது சுகாதாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் தேனி தனியார் மகாலில் ஏ.ஐ.டி.யு.சி. அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்க மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத் தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!

மாவட்ட தலைவர் கண்ணன், துணை தலைவர்கள் பாண்டி, முத்துராஜ், செயலாளர் பிச்சைமுத்து, இ.கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் ரவிமுருகன், செயலாளர்கள் ராஜ்குமார், பாண்டி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர். மேலும் உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல், தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, வார விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்களை வலியுறுத்தி மாநாடு நடந்தது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சீருடைப் பணியாளர்கள் முதலான அரசு பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் புதிய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த புதிய பென்ஷன் திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு முதலான எந்தவிதப் பலன்களும் இல்லாததால் இதனை ரத்து செய்து மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என 19 ஆண்டுகளாக, மத்திய அரசு ஊழியர்களும் மாநில அரசு ஊழியர்களும் போராடி வருகிறார்கள். இந்நிலையில் பழைய பென்ஷன் திட்டம் அமலுக்கு வந்தால் ஊழியர்களுக்கு அதிக பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!