எனது மகன் அர்ஷ் அப்படியே என்னை போலவே இருக்கிறான் – ஆலியா ஓபன் டாக்!
தற்போது தான் ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆன குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அர்ஷ் எனவும் பெயர் வைத்துள்ளனர். உங்களது மகன் அர்ஷ் யாரை போல இருக்கிறான் என ரசிகர் கேட்ட கேள்விக்கு ஆலியா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
ஆலியாவின் மகன் அர்ஷ்:
விஜய் தொலைக்காட்சியில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். ஒரே சீரியலில் இணைந்து நடித்ததன் மூலமாக காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. குழந்தை பிறப்பிற்கு பிறகு ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி 2 தொடரில் நடித்து கொண்டிருந்தார். சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். ராஜா ராணி தொடரில் நடித்து கொண்டிருந்த போதே ஆலியா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார்.
ஐலா பாப்பா அர்ஷை சந்தித்த அழகான தருணம் – ஆலியா வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் உற்சாகம்!
கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கூட ராஜா ராணி தொடரில் நடித்துவந்தார். தொடர்ந்து நான் மட்டுமே சந்தியாவாக நடிப்பேன் எனவும் கூறியிருந்தார். பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக ரியா என்கிற புதுமுக நடிகை சந்தியாவாக அறிமுகமானார். தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் எனவும் பெயர் வைத்துள்ளனர்.
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ராஜா ராணி சீரியலில் இணைந்து நடிக்கமாட்டேன் எனவும், தொடர்ந்து ரியா தான் சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் அதிர்ச்சி கலந்த செய்தியை தெரிவித்தார். தற்போது அர்ஷ் யாரை போல உள்ளார் என ஒரு ரசிகரின் கேள்விக்கு ஆலியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதாவது அர்ஷ் அப்படியே என்னுடைய முக பாவனையில் தான் இருக்கிறான். பல விஷயங்கள் என்னை நினைவு படுத்துகிறது என கூறியுள்ளார்.