சென்னைவாசிகளுக்கு ஹாப்பி நியூஸ் – பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி! அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்து முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாநகராட்சி அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் காரணமாக ஜனவரி 2ம் வாரத்தில் இருந்து , தமிழக முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க உத்தரவிட்டார். இந்த அறிவிப்பின் அடிப்படையில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு, மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளித்தார். இந்த வகையில் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பார்கள், கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
மீண்டும் முழு ஊரடங்கு அமல் – தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்!
மேலும் உள் அரங்குகள், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள், பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு குறித்து நேற்று முன் தினம் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறப்பு மற்றும் இரவு ஊரடங்கு ரத்து, வார விடுதி நாட்களில் முழு ஊரடங்கு ரத்து என அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – இன்னும் 2 நாட்கள் மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!
அந்த வகையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளித்து மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் கடற்கரைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளான மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், அந்த நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் அடிப்படையில் தான் கொரோனா பரவல் குறைய வாய்ப்பு உள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.