தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – இன்னும் 2 நாட்கள் மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு - இன்னும் 2 நாட்கள் மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு - இன்னும் 2 நாட்கள் மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – இன்னும் 2 நாட்கள் மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த மாதம் 4ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடைகளுக்கு பொருட்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதால் கூடுதல் அவகாசத்தை வழங்கியுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பரிசு தொகுப்பில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகத்தில் உள்ள 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மகிழ்ச்சியான அறிவிப்பு!

அதன்படி ரேஷன் கடைகளின் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடந்த 4ம் தேதியில் இருந்து வழங்கி வருகிறது. இதனை ஜனவரி 13ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்புவதில் கால தாமதம் ஏற்பட்டது. அத்துடன் நடைமுறையில் இருந்த கைரேகை பதிவு முறை மூலமாக முதியவர்களுக்கு கைரேகை பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் கால தாமதம் ஏற்பட்டது. அதனால் இந்த மாதம் 31ம் தேதி வரை பொங்கல் தொகுப்பை வழங்க கால அவகாசத்தை அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு? அரசுக்கு வேண்டுகோள்!

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் இதுவரை 2.11 கோடி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த கார்டுதாரர்களில் 97.99 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க இன்றுடன் சேர்த்து 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை 4.32 லட்சம் பேர் வாங்காமல் இருக்கின்றனர். மேலும் கால அவகாசம் முடியும் நிலையில் ரேஷன் கார்டுதாரர்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!