மீண்டும் முழு ஊரடங்கு அமல் – தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்!
கேரள மாநிலத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் எல்லையில் தமிழக வாகனங்களை கேரள போலீசார் நிறுத்தி வைக்கின்றனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களை மட்டும் அனுமதிக்கின்றனர்.
வாகனங்கள் நிறுத்தம்:
இந்தியாவில் கொரோனா தினசரி தொற்று பாதிப்பு அதிகரிப்பதால், நடப்பு ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி மற்றும் மாஸ்க் அணிதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தவறால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முன் தினம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – இன்னும் 2 நாட்கள் மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!
இந்த வகையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு, இரவு ஊரடங்கு ரத்து மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அடிப்படையில் இன்று தமிழக முழுவதும் ஊரடங்கு கிடையாது. இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கேரளாவில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய தேவைகளான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மருத்துவம், விமான நிலையம் உட்பட வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு இல்லை என்பதால் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
தனது முதல் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடிய CWC புகழ் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் தமிழக எல்லையான களியக்காவிளை உடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்கு செல்ல கேரள போலீசார் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு குறைவான வாகனங்கள் மட்டும் செல்கின்றன.