‘மீண்டும் லாட்டரி விற்பனை’ – மாநில முதல்வர் அனுமதி!
மத்திய பிரதேசத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு மீண்டும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
லாட்டரி விற்பனை:
இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பு லாட்டரி சீட்டு விற்பனை பரவலாக இருந்தது. ஆரம்பத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். மக்கள் தனது சொந்த பணத்தில் குறைந்த விலையில் லாட்டரி சீட்டு வாங்கி அதிக பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு நபர் எண்ணற்ற சீட்டுகளை வாங்குகின்றனர். ஒவ்வொரு முறையும் நமக்கு பெரிய தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் லாட்டரி சீட்டுகளை வாங்குகின்றனர். சிலர் லாட்டரி சீட்டுகளை வாங்குவதையே தொழிலாக கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் 10 & 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வர்கள் ஆல் பாஸ் – அரசாணை வெளியீடு!
இதனால் ஏழை, எளிய மக்கள் சம்பாரிக்கும் மொத்த பணத்தையும் லாட்டரி சீட்டுகளில் செலவிட தொடங்கினர். இதனால் அவர்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் வாழ்நாள் சேமிப்பை இழந்து தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாகினர். இந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பல மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்தனர். தடையை மீறி லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – செப்.30 ஆம் தேதி முடிவு!
ஆனாலும் கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் லாட்டரி விற்பனை எவ்வித தடைகளும் இன்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது மத்திய பிரதேசத்தில் தடை செய்யப்பட்டிருந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாநில வரி வருவாயை பெருக்கும் வகையில் மத்திய பிரதேசத்திலும் லாட்டரி விற்பனைக்கு அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.