தமிழகத்தில் 10 & 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வர்கள் ஆல் பாஸ் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த 10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுத இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
தேர்வின்றி தேர்ச்சி:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வந்ததன் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த காரணத்தால் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – செப்.30 ஆம் தேதி முடிவு!
இதில் மதிப்பெண்கள் போதாது என கூறி விருப்பமுள்ள மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனித்தேர்வர்களாக 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களும் அடங்குவர் என குறிப்பிடப்படுகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவது கடினமானது என கூறப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை மூட வாய்ப்பு? அறிக்கை தகவல்!
எனவே செப்டம்பர் மாதம் நடைபெறும் 10 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி, தனித்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வில் விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு எழுதலாம் என கூறப்பட்டுள்ளது.