தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – செப்.30 ஆம் தேதி முடிவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து வருகிற செப்.30 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் கடந்த ஒன்றரை ஆண்டாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்பதால், பள்ளிகளில் நேரடி வகுப்புகள் விரைந்து தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் படி செப்டம்பர் 1 ஆம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!
மேலும் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் 7 நாட்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகள் திறந்து தற்போது வரை ஒரு சில இடங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் குறிப்பிட்ட பள்ளிகள் மூடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
முன்னாள் படைவீரர் நல அலுவலக காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் ஆலோசனை படி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது பற்றி வரும் செப்.30ம் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பதா? கூடுதல் தளர்வுகளை அறிவிப்பதா? என்பதற்கான கூட்டம் நடந்து முடிந்த பிறகு முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.