இன்று முதல் அனைத்து பள்ளிகளும் மூடல் – அலுவலக ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

0
இன்று முதல் அனைத்து பள்ளிகளும் மூடல் - அலுவலக ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
இன்று முதல் அனைத்து பள்ளிகளும் மூடல் - அலுவலக ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
இன்று முதல் அனைத்து பள்ளிகளும் மூடல் – அலுவலக ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று முதல் பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுவதாகவும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பணிகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடி

சமீப காலமாக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் இலங்கையில், எரிபொருள், எரிவாயு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பணம் கிடைக்காமல் அரசாங்கம் திணறி வருகிறது. இதற்கிடையில் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் இப்போது அரசியல் நெருக்கடியாக மாறி இருக்கிறது. அந்த வகையில், இந்த அவல நிலைக்கு அரசாங்கம் மட்டுமே காரணம் என்று எண்ணிய அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

Exams Daily Mobile App Download

இப்போது இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இன்று முதல் பள்ளிகளை மூட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதே நேரத்தில், அந்நாடு கடுமையான எரிபொருள் பற்றாக்குறைக்கு தயாராகி வருவதால், அத்தியாவசிய சேவைகளை தவிர மற்ற பணியிடங்களில் ஊழியர்கள் வேலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்த பொது நிர்வாக அமைச்சகத்தின் அறிவிப்பில், ‘தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து வசதிகளில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் அதிகாரிகளைத் தவிர மற்ற யாரும் பணிக்கு வர வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – ஜூலையில் தேர்வு முடிவுகள் வெளியீடு!

இதற்கிடையில், எரிபொருள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் நீண்ட நெடு வரிசையில் காத்திருக்கின்றனர். இலங்கையில் இப்போது கிட்டத்தட்ட பெட்ரோலே இல்லாத நிலை உள்ளது. மற்றும், மற்ற எரிபொருட்களுக்கும் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் 51 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் நிலையில் நாட்டில் தற்போது 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு கையிருப்பு இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!