தனது மகன் அர்ஷுடன் முழு நேரத்தையும் செலவிட்டு கொண்டிருக்கும் ஆலியா & சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!
தற்போதுதான் ஆலியாவிற்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் நேரத்தை செலவிடும் படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஆலியா & சஞ்சீவ்:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜாராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் ஆலியா மற்றும் சஞ்சீவ். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். இவருக்கு ஐலா பாப்பா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்து சில மாதங்களிலேயே மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா-ராணி சீசன் 2 சீரியலில் அறிமுகமானார்.
தமிழகம் முழுவதும் ஒரு வாரம் பள்ளிகள் மூடல் – தனியார் கல்வி நிறுவனங்கள் போராட்டம்!
ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கூட தொடர்ந்து சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிரசவ நாளுக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். பின்பு ஐலா பாப்பாவின் இரண்டாவது பிறந்த நாளான மார்ச் 20 அன்று ஆலியாவிற்கு கோலாகலமாக வளைகாப்பு நடைபெற்றது.
பின்பு புதிதாக பிறக்க போகும் குழந்தைக்காக 75 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரையும் ஆலியா மற்றும் சஞ்சீவ் வாங்கினர். தற்போது ஆல்யாவிற்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது அந்த புதிய பென்ஸ் காரில் தான் அழைத்து சென்றுள்ளனர். தற்போது ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் தனது மகனுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஆலியா மகன் அர்ஷ்க்கு சஞ்சீவ் முத்தம் கொடுக்க சென்றபோது ஆலியா தனது மகனுக்கு நீங்கள் முத்தம் கொடுக்காதீர்கள், வலிக்கும் என கூறும் படியான வீடியோ வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.